நிலச் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு வீட்டுக் கடன் அளித்தல் என்பதை உட்கொண்டு இருக்கவில்லை. வாசகர்கள் கூடுதல் கவனத்திற்கு, இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று விளைநில உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேளாண் மற்றும் அதற்குத் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் போன்றவை 2007 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்புகளில் 16.6 சதவீதத்தைக் கொண்டிருந்தது, மொத்த வேலைவாய்ப்பில் 60 சதவீதம் விவசாயமே கொண்டும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் தன்னுடைய பங்கில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், இன்றுவரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும்பங்கினை வகிக்கிறது. பால், முந்திரிக்கொட்டை, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா.[2] உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்) அது கொண்டிருக்கிறது. கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டு மீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு. புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியா 10 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது, அதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகையானது, அரிசி மற்றும் கோதுமை தயாரிப்பிதற்கான ஆற்றலைவிட வேகமாக அதிகரிக்கிறது.